Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/முடிவு அவர் கையில்!

முடிவு அவர் கையில்!

முடிவு அவர் கையில்!

முடிவு அவர் கையில்!

ADDED : செப் 20, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
* கடவுள் நினைப்பில் முழுமையாக கரைந்து விடுங்கள். அவரை அடைய நேசிப்பதும், சுவாசிப்பதுமே தியானம்.

* பக்தி என்பது பூஜை செய்வதோ, பஜனை செய்வதோ மட்டும் அல்ல. தொடர்ந்து கடவுளைப் பற்றி சிந்திப்பதே பக்தி.

* மனம் ஒன்றி வேண்டுவது அனைத்தையும் கடவுள் அளிக்க தயாராக இருக்கிறார். எனவே, சரியானவற்றை கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.

* எத்தனை சோதனை வாழ்வில் குறுக்கிட்டாலும், கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் அதனை எளிதாகப் போக்கி விட முடியும்.

* முயற்சி மட்டுமே மனிதன் கையில் இருக்கிறது. அதில் கிடைக்கும் வெற்றியோ, தோல்வியோ கடவுளின் கையில் தான் இருக்கிறது.

* முதலில் கடவுள், இரண்டாவது உலகம், மூன்றாவது நான் என்ற வரிசையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us